கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் பேச தடை விதிக்க வேண்டும் என கோரி திமுக தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த மனுவை திமுக மீள பெற்றுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில்,கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.
இந்த நிலையில் , சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க.வின் அமைப்பு செயலர் சமீபத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருவதாகவும் இது, சாட்சிகளை அச்சுறுத்தும் செயல் எனவும் இவர்கள் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்’ எனவும் , குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் திமுக தாக்கல் செய்த மனுவை மறுத்துள்ளது. இதன்பின்னர் , திமுக தரப்பு சட்டத்தரணி , தாங்கள் மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார்.














