பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைத் தவிர்த்து, இணையத்தளம் (Online) ஊடாகத் தங்களது TIN இலக்கத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஏ.பி.குணதுங்ஹ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடன் நேற்று நடத்திய விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய இறைவரித் திருத்தச்சட்டத்தின்படி வங்கிக்கணக்கு, நிலப்பதிவு, வாகனப்பதிவு மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடியும் எனவும், புதிய சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பிராந்திய ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.













