வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபரண சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கில் தொடர்புடைய இரண்டு இந்தியப் பிரஜைகளான சாட்சிகளுக்கும் , வெளிநாட்டுச் சாட்சிகளுக்கும் அழைப்பாணை அனுப்பும் நடைமுறையின் கீழ் அழைப்பாணை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன் இந்த வழக்கினை விசாரணைக்காக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அழைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.













