பிரிட்டனின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பொதுப் பாடசாலையில் , பாடத்திற்கு உதவி கேட்பது போல நடித்து, தனது ஆசிரியையை 16 வயது மாணவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
சம்பவத்தன்று அந்த 16 வயது மாணவன், பாடம் தொடர்பாக உதவி கேட்கும் வகையில் ஆசிரியையை பின்தொடர்ந்து வகுப்பறைக்குள் சென்றுள்ளான்.
வகுப்பறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிய அவன், தனது பையைத் தேடுவது போல நடித்து, அதற்குள் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து ஆசிரியை மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளான்.
சந்தேகநபரான 16 வயது மாணவன், பாடசாலைக்குள் கத்தியை வைத்திருந்த குற்றத்தை ஏற்கனவே ஒப்புக்கொண்ட போதிலும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள ‘கொலை முயற்சி’ குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
இதேவேளை, இந்த பாடசாலை வன்முறைச் சம்பவம் தொடர்பான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.














