காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்திய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது உதவியாளர் கோல்டி ப்ரார் (Goldy Brar) ஆகியோரே இணைந்து இந்த கொலையை திட்டமிட்டு நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் இந்திய அரசை இணைக்கும் வகையில் எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு கனடாவில் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போதைய கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு இந்தியாவுடனான உறவை மீண்டும் வலுப்படுத்தி வருகின்ற பின்னணியில் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.












