தாய்லாந்து பாங்கொக் நகரில் மதுபான விடுதியில் தீவிபத்து ஏற்பட்டமைக்கு கவனக்குறைவே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இந்த தீவிபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 27 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சுமார் 24 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரவு தீடீர் தீவிபத்து ஏற்பட்டது.
மதுபான விடுதியில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவே தீவிபத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது
அத்துடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களினால் குறித்த மதுபான விடுதி அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் கதவுகள் மூடப்பட்டிருந்ததுடன் அவசரகால வெளியேறும் முனையம் என்பன பூட்டப்பட்டிருந்தமையினாலேயே உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த துயரசம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 27 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் சுமார் 24 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அத்துடன் குறித்த மதுபான விடுதி உணவகம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இது களியாட்டவிடுதியாக இயங்கிவந்துள்ளதாக பாங்கொக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனக்குறைவான அலட்சிபோக்கே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள களியாட்ட விடுதிகள் அரங்குகள் மற்றும் உணவகங்களின் கட்டுமானம் மற்றும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பரிசீலனை செய்து வருவதாக பாங்கொக் உட்கட்டமைப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.















