பிரிட்டனில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி பயணங்கள் காரணமாக, டோவர் (Port of Dover) துறைமுகத்தை நோக்கிச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
நேற்றிரவு முதல் துறைமுகத்தை அடைய முயன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், சிலர் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கென்ட் (Kent) பகுதியிலிருந்து வெளியான தகவல்களின்படி, நேற்றிரவு மட்டும் சுமார் 45 நிமிடங்கள் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. இதேவேளை, இந்த வார இறுதியில் நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 41 இலட்சம் (14.1 மில்லியன்) வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் என ராயல் ஆட்டோமொபைல் கிளப் (RAC) கணித்துள்ளது.
இந்த கணிப்பின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் RAC போக்குவரத்து தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து, இது இரண்டாவது மிகப் பரபரப்பான வார இறுதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், கூடுதல் நேரத்தை ஒதுக்கி முன்கூட்டியே பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதல் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் இதேபோன்ற கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.













