தேவுந்தர கோயில் ஊர்வலம் தொடர்பாக இரண்டு குற்றக் கும்பல் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மாத்தறையில் உள்ள தேவுந்தர கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, ‘தெஹிபாலே மல்லி’ என்ற குற்றவாளியின் குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
தேவுந்தர கோயில் ஊர்வலத்தில் பங்கேற்கும் காவடி நடனக் குழுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதையடுத்து, தேவுந்தர கோயிலின் பஸ்நாயக்க நிலமேயான திலின மதுசங்கவைக் கொலை செய்வதாக 20ஆம் திகதியன்று ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
காஞ்சிபானி இம்ரான் பயன்படுத்தும் KPI என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி அவர் அவ்வாறு மிரட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, காஞ்சிபானி இம்ரானைக் கொலை செய்வதாக ‘தெஹிபாலே மல்லி’ என்ற குற்றவாளி மிரட்டும் ஒலிப்பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.
பின்னர் அவர் மற்றொரு ஒலிப்பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இத்தகைய பின்னணியில், நேற்று இரவு, தேவுந்தர தேவாலயத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு அருகிலிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
அந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் , குற்றவாளி தெஹிபாலே மல்லி என்று கூறி, மற்றொரு ஒலிப் பதிவு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.













