முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் விசாரிப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு தமது சட்டத்தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் இன்று (22) ஆட்சேபனை தெரிவித்தார்.
யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மேல்முறையீடு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த ஆட்சேபனையை எழுப்பினார்.














