முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, இன்று (28) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் (State Engineering Corporation) சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் ஜூலை 15 அன்று கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














