பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது , நாமல் ராஜபக்ஷவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
பின்னர், விசாரணைகளின் முன்னேற்றத்தை ஒக்டோபர் 29 அன்று சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.













