ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையைத் திருத்தி அமைக்கப் போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்திருந்த போதிலும், மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டாம் என நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான தற்போதைய விலைகளே செல்லுபடியாகும் மற்றும் தொடர்ந்து வழங்கப்படும்
அதன்படி, 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் – ரூ. 4,465 , 5 கிலோ எரிவாயு சிலிண்டர் – ரூ. 1,792,
2.3 கிலோ எரிவாயு உருளை – ரூ. 835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
















