மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம் (12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று காலை வசந்த மண்டபத்தில் கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலலாவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட சென்றார்.
பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா வந்தார்.
அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து எள்ளும்,தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை,மோச்ச விளக்கு ஏற்றப்பட்டு,பக்த அடியார்கள் இறந்த தமது முன்னோர்களை நினைவு கூறி வழிபட்டனர்.







