இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவ்பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, அகஸ்ட் மாதத்தில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 6914 ஆகும்.
கம்பஹா மாவட்டத்தில் 19,671 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 18,289 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,635 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6040 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 5,964 பேரும், காலி மாவட்டத்தில் 5,063 பேரும், இரத்தினபுர மாவட்டத்தில் 4,946 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய தரவு அறிக்கை காட்டுகிறது.
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.














