கொழும்பு 07, பார்ன்ஸ் பெலேஸ் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றுடன் தொடர்புடைய போலியான உறுதியொன்றைத் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, 2026.09.16 அன்று களுத்துறை நகரில் வைத்து குறித்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த சந்தேகநபர் இந்த போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் ரூபாய் 10,000,000/- (ஒரு கோடி ரூபாய்) பெறுமதியான சொத்தொன்றை விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.















