• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்

1.052 Views
5 years ago
73 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    0 Subscriber

    பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி பலவகையில் தாக்குதல்கள் மற்றும் சீண்டும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மட்டக்களப்பில் மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    மேலும், கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமானது 1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகத்தினால் கையாளப்பட்டிருந்ததுடன் 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28 பிரதேச செயலகங்கள் அமைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

    இதன்போது, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக அமைக்கப்பட்டபோதும் அதனை, பிரதேச செயலகமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.

    இந்நிலையில், குறித்த உப பிரதேச சபையை தரமுயர்த்துவதில் கடந்த ஆட்சிக்காலத்தில் இழுத்தடிப்புச் செய்யப்பட்ட நிலையில் ஆட்சியும் கலைந்தது.

    இதன்பின்னர், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசியதன் பின்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தற்போது இருக்கின்ற அதிகாரத்தையும் தர நிலையையும் குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதனைக் கண்டித்துள்ள அவர், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில் பிரதேச நிர்வாக அலுகுக்குரிய அதிகாரத்தைக்கூட முழுமையாக வழங்காமல் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளையோ அல்லது இரு சமூகத்தையும் மோதவிடுவதற்கான பிரித்தாளும் தந்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வியடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளதாக ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.

    இதேவேளை, கல்குடாவில் உள்ள தொப்பிக்கல் பகுதியான, முன்னர் அதிகளவில் போராளிகள் இருந்த பகுதியில் பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, மாவட்ட அரசாங்க அதிபர், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் போன்றவர்கள் மக்களுக்கு தகவல்களைக்கூட பரிமாறிக்கொள்ளும் நோக்கமில்லை எனவும் குறித்த பகுதிக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி பிரதேச செயலாளர், மின்சார சபையினர், மகாவலி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர் போன்றோருடன் ஆளுநரின் பிரத்தியேக குழுவும் அப்பகுதிக்குச் சென்ற நிலையில் அங்கு பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர் என ஸ்ரீநேசன் கூறியுள்ளார்.

    இந்த நடவடிக்கை படைப் பலத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் காணி, நிலங்களை கையாடல் செய்வதற்காக அந்தப் படைப் பலத்தைப் பிரயோகிக்கின்ற செயற்பாடு நடைபெறுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    எனவே, இந்த அரசாங்கம் தமிழ் பேசும் மக்களை பல்வேறு வகையில் இக்கட்டான நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கின்றது” என ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

    Related

    Category: இலங்கை கிழக்கு மாகாணம் பிரதான செய்திகள் மட்டக்களப்பு
    Tags: KalmunaiSrinesanகல்முனைகல்முனை வடக்கு பிரதேச சபைஞா.ஸ்ரீநேசன்தமிழ் மக்கள்முஸ்லிம் மக்கள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!
    இலங்கை

    இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

    2025-12-02
    கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!
    இலங்கை

    கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

    2025-12-02
    பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!
    இலங்கை

    பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

    2025-12-02
    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
    இலங்கை

    சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

    2025-12-02
    கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
    இலங்கை

    கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

    2025-12-02
    இந்திய கடற்படையின் மகத்தான உதவி!
    ஆசிரியர் தெரிவு

    பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகளின் பட்டியல்!

    2025-12-02
    Next Post
    ரொறொன்ரோவில் வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரிப்பு!

    ரொறொன்ரோவில் வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரிப்பு!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.