• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

Dhackshala by Dhackshala
2021/07/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
171 1
A A
0
90
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், ”15 வயதான குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

இதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

எனினும் எங்களுக்கு தெரியாமல் எங்கெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றது. அத்துடன் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுவதாக தினமும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரினாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

குறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன்காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதேபோன்று சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன் அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர்.

எனவே முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இரா.சாணக்கியன்சிறுமிமரணம்
Share46Tweet19Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்
இலங்கை

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!
இலங்கை

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!
இலங்கை

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு
இலங்கை

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை!

2023-01-31
பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !
இலங்கை

தொடர்ந்து நான்காவது மாதமாக பணவீக்கம் குறைந்துள்ளது!

2023-01-31
மொரட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்
இலங்கை

மொரட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்

2023-01-31
Next Post
வர்த்தகம் செய்வதில் அபாயங்கள் தொடர்பாக அமெரிக்காவின் கருத்திற்கு ஹொங் கொங் பதிலடி

வர்த்தகம் செய்வதில் அபாயங்கள் தொடர்பாக அமெரிக்காவின் கருத்திற்கு ஹொங் கொங் பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

2023-01-29
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை!

2023-01-31

Recent News

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.