விராட் கோலி அடுத்த மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெளிவுபடுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஏத்தியவரும் ஜனவரி 19 ஆம் திகதி தொடங்குகின்றது.
இந்நிலையில் விராட் ஒருநாள் போட்டிகளை புறக்கணித்ததாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என பிசிசிஐயின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய ஐயின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினால் கோலி மகிழ்ச்சியடையவில்லை என்ற ஊகத்தின் பின்னணியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இருபதுக்கு 20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளுக்கும் தலைவராக உறுதி செய்யப்பட்டார்.