• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிதி இல்லாத  இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம்

நிதி இல்லாத இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம்

shagan by shagan
2022/04/21
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வழங்கப்பட்ட புதிய அமைச்சரவை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்ட  இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் குறைந்த, இராஜாங்க அமைச்சர் பதவியும், இந்த அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்து இந்த அரசாங்கத்தை விமர்சித்து வந்த முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்றம் உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் வழங்கி இந்த அரசாங்கம் இன்னும் இன்னும் தமிழர்களைக் கேலியாக்கியுள்ளது.

இவ்வாறாக அரசாங்கம் செயற்படுகையில் அதிகாரம் குறைந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்று இவர்கள் ஏன் அரசுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

வடக்கைப் பொருத்தவரையில் யாழ்ப்பாணத்தில் அரசுக்குச் சார்பாகச் செயற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதிகாரமுள்ள அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளார்கள்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் சந்திரகாந்தன் ஆகியோர் இந்த அரசுக்குச் சார்பாகவே செயற்பட்டு வருகின்றனர். அரசின் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதில் இவர்கள் சார்ந்து நியாயப்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் இவ்வாறான பிரச்சினைகளின் போது குறிப்பாக சமூக நலன் தொடர்பாக எந்தவித தூரநோக்கும் இல்லாமல் எரிபொருள், எரிவாயு, பொருட்களின் விலையேற்றம் போன்ற விடயத்தில் இந்த அரசாங்கமும், ஆளுந்தரப்பு பிரதிநிதிகளும் எவ்வித கரிசனையும் காட்டவில்லை.

குறிப்பாக மடடக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற அரசு சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு மக்கள் அவதியுறும் இந்த நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கே நாட்டில் பணமில்லாத இந்த நிலையில் அதிகாரம் குறைந்த இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டுமா? இந்த நாட்டில் தற்போதைய நிலையில் அபிவிருத்திக்கென எந்த நிதியுமே இல்லை என்பது உலகத்திற்கே தெரியும்.

இவ்வாறு பிரயோசனமற்ற நிலையில் இவ்வாறான அமைச்சுகளை வைத்து என்ன செய்யப் போகின்றார்கள். இவர்கள் இதனைப் பொறுப்பெடுக்க வேண்டுமா? எனவே இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதா இல்லையா என அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

அத்துடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாடு பூராகவும் மூவின மக்களும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை செயற்படுத்தி வருகின்ற வேளையில் நேற்றைய தினம் ரம்புகனையில் இடம்பெற்ற போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தின் மூலம் ஒருவர் கொல்லப்பட்டதும் பலர் காயமுற்றிருபப்பதுமான விடயம் இந்தக் கொடுங்கோல் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு அடித்த சாவு மணியாகவே அமைகின்றது.

எனவே அந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டினை நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரியும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கும் எதிராக இந்தப புதிய அமைச்சரவை சட்ட நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளும் உள்ளன.

இவ்வாறான இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். கொடுங்கோலாட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு, அதிகாரங்களைப் நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தைப் மீள நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம் என புதிய அமைச்சர்களுக்கு தேரர் எச்சரிக்கை!

Next Post

ஏப்ரல் 25ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம்

Related Posts

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!
இலங்கை

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
இலங்கை

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில்  தீப்பரவல்
இலங்கை

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில் தீப்பரவல்

2026-01-15
சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!
இலங்கை

சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!

2026-01-15
இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை
இலங்கை

இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை

2026-01-15
யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்
இலங்கை

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

2026-01-15
Next Post
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

ஏப்ரல் 25ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது - லிட்ரோ நிறுவனம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பொலார்ட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் பொலார்ட்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷ்யா அறிவிப்பு!

கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷ்யா அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

0
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

0
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

0
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

0
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

0
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

2026-01-15

Recent News

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.