• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம்  சாத்தியமில்லை – டக்ளஸ்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/10
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிப்பதுடன், குறித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்ற கலந்துரையாடல்களிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவும் நிர்வாக அதிகாரங்களுக்கு ஊடாகவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் மாகாண அரசாங்கங்களிடம் கையளிப்பது முதலாவது கட்டம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களுள், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு இடையூறாக இருக்கின்றவற்றை ஆராய்ந்து, அவை 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் இரண்டாவது கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக, 13 வது திருத்தத்தின் சில விதிகளில் உள்ள தெளிவின்மையை நீக்குவதற்கும், தெளிவான முறையில் அதிகாரங்களை வரையறை செய்வதற்கும் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கும், அத்தோடு சட்டமியற்றுதல், நிர்வாக, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் பல்வேறு அடுக்குகள் மூலம் பயன்படுத்துவதற்கான வரையறைகளை  உருவாக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளுதல், போன்ற செயற்பாடுகளின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ’13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்க முடியும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் நீண்ட காலமாக நிலையாக இருந்து வருகிறோம்.

சில அரசியல் கட்சிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, 13வது திருத்தம் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்று கூறினாலும், 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்கு,  கிழக்கு மாகாணத்திற்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தல்களைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகளும் வடமாகாணத்தில் ஒரு முறையும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இது மாகாண சபை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது. மற்ற மாகாணங்களிலும் மக்கள் இப்போது இந்த முறைக்கு பழகிவிட்டனர்,

அதைத் தொடர்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. 13 வது திருத்தத்தின் ஊடான அதிகாரப் பகிர்வை சரியான முறையில் வரையறைப்படுத்தி அர்த்தமுள்ள முறையில் செயல்படுத்துவது ஒரு ஐக்கிய நாட்டிற்குள் பன்முகத்தன்மையையும் மற்றும் பன்மைத்தன்மையைக் கையாள்வதற்கான வழிமுறையையும் வலுப்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: 3ஆவது திருத்தம்அரசியலமைப்புடக்ளஸ் தேவானந்தா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

Next Post

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ் ஓய்வு!

Related Posts

கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2%  உயர்வு!
உலகம்

கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2% உயர்வு!

2025-07-25
செம்மணி மனித புதைகுழி:  இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
பிரதான செய்திகள்

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

2025-07-25
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

2025-07-25
தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்!  பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு
இங்கிலாந்து

தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்! பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு

2025-07-25
பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான  சர்வதேச மாநாடு!
இலங்கை

பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு!

2025-07-25
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

அதுல திலகரத்னவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

2025-07-25
Next Post
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ் ஓய்வு!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ் ஓய்வு!

வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அமைச்சுகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
செம்மணி மனித புதைகுழி:  இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
கனடாவில் வேலைவாய்ப்பு நிலவரம்: கடந்த 3 மாதங்களில் 2% வேலைவாய்ப்பு உயர்வு!

கனடாவில் வேலைவாய்ப்பு நிலவரம்: கடந்த 3 மாதங்களில் 2% வேலைவாய்ப்பு உயர்வு!

0
1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

0
தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்!  பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு

தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்! பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு

0
கனடாவில் வேலைவாய்ப்பு நிலவரம்: கடந்த 3 மாதங்களில் 2% வேலைவாய்ப்பு உயர்வு!

கனடாவில் வேலைவாய்ப்பு நிலவரம்: கடந்த 3 மாதங்களில் 2% வேலைவாய்ப்பு உயர்வு!

2025-07-25
செம்மணி மனித புதைகுழி:  இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

2025-07-25
1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

2025-07-25
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

2025-07-25
தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்!  பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு

தாய்லாந்து – கம்போடியாவில் நீடிக்கும் பதற்றம்! பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அரசு

2025-07-25

Recent News

கனடாவில் வேலைவாய்ப்பு நிலவரம்: கடந்த 3 மாதங்களில் 2% வேலைவாய்ப்பு உயர்வு!

கனடாவில் வேலைவாய்ப்பு நிலவரம்: கடந்த 3 மாதங்களில் 2% வேலைவாய்ப்பு உயர்வு!

2025-07-25
செம்மணி மனித புதைகுழி:  இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

2025-07-25
1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் “தலைவன் தலைவி”

2025-07-25
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

2025-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.