• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் விண்வெளிச் சரித்திர சாதனையில் கடந்து வந்தபாதை

இந்தியாவின் விண்வெளிச் சரித்திர சாதனையில் கடந்து வந்தபாதை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/28
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

சந்திரயான் – 3, நிலவின் தென் துருவப் பகுதியில் கடந்த புதன்கிழமை 23ஆம் திகதி தடம் பதித்துள்ளமை இந்திய விண்வெளிச் சாதனையின் புதிய உச்சமாகும். அந்த வகையில் இந்தியா விண்வெளிச் சாதனையை நிலைநாட்டுவதற்கு முன்னதாக வரலாற்றில் கடந்த வந்த மிகவும் கடினமானது.

இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞரான ஆர்யபட்டாவின் பெயரில் 1975 ஏப்ரல் 19இல் ஏவப்பட்டது. 5 கோடி ரூபா செலவில் முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப் பட்டது ஆர்யபட்டா. சுமார் 250 பொறியாளர்கள் இரண்டு ஆண்டுகள் உழைத்ததன் பலனாக ஆர்யபட்டா வடிவமைக்கப்பட்டது.

இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்று அழைக்கப்படும் ‘இன்சாட்’ ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டுத் தகவல் தொடர்பு அமைப்பு என்ற பெருமைக்குரியது. 1983இல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தொலைத்தொடர்புத் துறை, இந்திய வானிலை ஆய்வுத் துறை, அகில இந்திய வானொலி, தூதர்ஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவானது.

இன்சாட் தொகுதியில் அனுப்பப்பட்ட 9 செயற்கைக்கோள்களால்தான், இந்தியாவில் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பில் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது. இந்தத் தொகுதியில் மொத்தம் 21 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவற்றில் 11 இயக்கத்தில் இருக்கின்றது.

அதேபோன்று பிஎஸ்எல்வி, இந்தியாவின் மிக முக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு உதவி இந்தியாவின் விண்வெளி சாதனைகள் பலவற்றுக்கும் காரணமாக விளங்குகிறது.1994 முதல் 2016 வரை 38 முறை பிஎஸ்எல்வி விண்ணில் பாய்ந்துள்ளது. இதில் 37 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, 121 செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளது.

இதில் 79 செயற்கைக் கோள்கள் சுமார் 20 வெளிநாடுகளுக்கு சொந்தமானவை, 42 இந்தியாவுக்கு சொந்தமானவை. சந்திரயான் 1, மங்கள்யான், அஸ்ட்ரோசாட், எஸ்ஆh்இ -1, நேவிக் ஆகிய முக்கியமான திட்டங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்வதற்கு உதவியாக இருந்தது பிஎஸ்எல்வி ஏவுகலன்கள் தான்.

நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பி ஆய்வு செய்வது என்ற எண்ணம் 1999ஆம் ஆண்டே இந்திய விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. அதற்கு இந்திய அரசும் ஒப்புதல் அளிக்கவே சந்திரயான் 1 திட்டம் 386 கோடி ரூபா திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரை தலைவராக இருந்தார்.

பிஎஸ்எல்வி எக்ஸ் எல் ரொக்கெட் மூலம் 2008 ஒக்டோபர் 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனாலும் அதன் இலக்கை எட்டமுடிந்திருக்கவில்லை. இதனையடுத்து ஏனைய கோள்களுக்குப் பயணம் செய்யும் திட்டத்தை 2010ஆம் ஆண்டு 454 கோடி ரூபா மதிப்பில் இந்தியா ஆரம்பித்தது. அமெரிக்காவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டமான ஃபோனிக்ஸைக் காட்டிலும் மங்கள்யானின் திட்ட மதிப்பு 10 மடங்கு குறைவாகும்.

இஸ்ரோவின் கோள்களுக்கு இடையிலான முதலாவது பயணத் திட்டமும் இதுவாகும். மேலும், 2014 செப்டம்பர் 24ஆம் திகதி செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்ததன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

ஐஆர்என்எஸ்எஸ் எனப்படும் ‘நேவிக்’ திட்டம், இந்தியாவின் வரைபடத் துல்லியத்தன்மைக்காக ஏவப்பட்டது. 7 செயற்கைக் கோள்களைக் கொண்ட இந்தத் தொகுப்பானது கடலோடிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், பேரிடர் மேலாண்மை, அரசின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இராணுவத்துக்கும் பெரிதும் பயன்படுகிறது.

2013 ஜூலையில் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் 2018 வரை 9 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இரண்டு தோல்வியில் முடிவடைந்தாலும் திட்டப்படி 7 செயற்கைக்கோள்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றன.

2016 ஜூன் 22ஆம் திகதி இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல் கல்லாகும். பிஎஸ்எல்வியின் 36ஆவது ஏவுகலன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. ஒரே ஏவுகலனில் அதிகப்படியான செயற்கைக்கோள்களை வைத்து இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது அதுதான் முதல் முறை.

மொத்தம் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதில், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.

அதன் பிறகு 2017 பெப்ரவரியில் அந்த சாதனையை தகர்க்கும் விதமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை ஒரு ரொக்கெட்டில் வைத்து அனுப்பி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள புலிகள்

Next Post

ஹட்டன் மக்களுக்கான விசேட அறிவிப்பு

Related Posts

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!
இந்தியா

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

2026-04-27
விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!
இந்தியா

விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!

2026-04-27
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இந்தியா

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

2026-04-27
திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!
இந்தியா

திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

2026-04-27
பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!
இந்தியா

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

2026-04-26
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!
இந்தியா

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

2026-04-26
Next Post
ஹட்டன் மக்களுக்கான விசேட அறிவிப்பு

ஹட்டன் மக்களுக்கான விசேட அறிவிப்பு

கொழும்பில் பல இடங்களுக்கு செல்ல தடை

கொழும்பில் பல இடங்களுக்கு செல்ல தடை

தெற்கில் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை : கோவிந்தன் கருணாகரம்!

தெற்கில் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை : கோவிந்தன் கருணாகரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

0
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

0
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

2026-04-27
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

2026-04-27

Recent News

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.