போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரெருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை பேருந்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவமொன்று நேற்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தப்பிச் சென்ற நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதனால் நீதிமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்கள் . பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் மதிய உணவுக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்படும் வரை,…
யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு காட்டு யானை தாக்குதலில் கல்முனையில் இருந்து நிந்தவூர் அல்லிமூலை வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் இறக்காமம் பகுதி 9 ஆம் பிரிவைச்…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (சனிக்கிழமை) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.