வத்தளை, ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட 76 வயதுடைய குறித்த பெண்ணை, கொலையாளி தீ வைத்தும் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் ராகம தலகொல்ல, பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.