தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வரும் சென்னையிலுள்ள எழிலக வளாகத்திற்கு மர்ம நபர் ஒருவரினால் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எழிலக வளாகத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.