கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்
ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இன்று வியாழக்கிழமை ஆளநர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றதுடன் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் அரச நியமனங் கோரிய மகஜர் ஓன்றையும் கையளித்திருந்தனர்
இதன் போது ஆளுநர் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நபடுபுராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம் எனவே கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக தெரிவித்தாhர்
இதேவேளை ஆளுநரை சந்தித்த பட்டதாரிகள் சங்க தலைவர் தெரிவிக்கையில் ஆளுறரிடம் பட்டதாரிகளின் கோரிக்கையடங்கிய மஜகரை வழங்கியுள்ளோம் அதன்பேது கிழக்கில் 3 ஆயிரத்து 500 பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடாத்தவுள்ளதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஆளுர் வாக்குறுதியளித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்