சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்
ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கலந்து கொண்டார்.
மேலும் கௌரவ அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ். ஏ. கே.சுபசிங்க ,நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்பி.எஸ்.சி.கே. முணசிங்க, மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.