இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று (18) மிதமானதாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது.
NBRO இன் படி, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டியவில் காற்றின் தரம் பகலில் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அனைத்து நகரங்களிலும் நேற்று (17.02.2025) காற்றின் தரம் மிதமான அளவில் காணப்பட்டது.
இன்று காற்றின் தரம் 44 தொடக்கம் 116 க்கு இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவிலும், இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டியவில் சற்று ஆரோக்கியமற்ற நிலை இருக்கும் என்பதை குறிக்கின்றது.
காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.