மினுவாங்கொடை, பதண்டுகொட பகுதியில் இன்று (26) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .
இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக் கட்டத் தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்து, தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் 36 வயதுடைய நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் காண்டு கைது செய்யவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை கண்டறியவும் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.