• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு!

மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு!

Rahul by Rahul
2025/03/02
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.

16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி,தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் தலதா மாளிகையை வழிபட வேண்டும் என்பது இந்த நாட்டின் பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.

நாட்டில் இழந்து வரும் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தாண்டின் நீட்சியாக நடைபெறும் தலதா கண்காட்சி நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பத்து நாட்கள் நடைபெறும் தலதா கண்காட்சியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, எந்தவித தடைகளும் அல்லது இடையூறுகளும் இல்லாமல் தலதா ஆண்டகையை வழிபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும், இதற்காக அரசாங்கம் உச்ச பங்களிப்பையும் தலையீட்டையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

முக்கியமாக மூன்று வரிசைகளின் ஊடாக வரும் பொதுமக்களுக்கு, தலதா மாளிகையை வழிபடும் வாய்ப்பை வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

தலதா மாளிகை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

தலதா கண்காட்சி நடைபெறும் காலகட்டத்தில் கண்டி பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், மாணவர்களின் கல்விக்காக வேறு நாட்களில் பாடசாலைகளை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​தலதா மாளிகையை வழிபட வரும் பக்தர்களின் சுகாதார வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மக்களின் சுகாதாரம், குடிநீர் தேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தலதா மாளிகையை வணங்க வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக தானசாலைகள் நடத்த விரும்புவோர் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்குவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

மக்களிடையே பௌத்த ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அலங்காரங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் விசேட தலதா நிகழ்வு குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

இதில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகள், முப்படைகள் மற்றும் பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்டஅதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: ColomboKandylkanewsPresidentsrilankaupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது!- மனோ கணேசன்

Next Post

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Related Posts

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!
இலங்கை

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

2025-12-05
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!
இலங்கை

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

2025-12-05
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

2025-12-05
நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை
இலங்கை

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

2025-12-05
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!
ஆசிரியர் தெரிவு

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

2025-12-05
மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !
இலங்கை

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

2025-12-04
Next Post
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2025 ரமலான் : புனித மாதத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

2025 ரமலான் : புனித மாதத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

0
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

0
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

0
நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

0
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

0
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

2025-12-05
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

2025-12-05
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

2025-12-05
நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

2025-12-05
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

2025-12-05

Recent News

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

2025-12-05
பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

2025-12-05
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

2025-12-05
நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.