கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நேற்று (03) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது முதலில் 4.1 ரிக்டர் அளவிலாக பதிவு செய்யப்பட்டதுடன் விக்டோரியா, வாங்கூவர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,கடந்த பெப்ரவரி மாதம் 13 மற்றும் 21ம் திகதிகளிலும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.