மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு துப்பாக்கி ரவைகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவத்தில் கஜ்ஜா என்ற 39 வயதான ஒருவரும் அவரது சிறுவயது பிள்ளைகள் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்
குறித்த சம்பவமானது (18) ஆம் திகது 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்ததுடன் கஜ்ஜா என்ற நபர் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்
அத்துடன் காயமடைந்த அவரது மகள், தங்காலை வைத்தியசாலையிலும் மகன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், 6 வயதான மகளும் ,மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் இதில் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது