இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 7 பேர் கொண்ட விசேட விசாரணைக் குழுவொன்றை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க தளத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படை இலக்கம் 05 போர் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் K-8 ரக விமானம் இன்று (21) வாரியபொல பதெனிய பிரதேசத்தில் பயிற்சி அமர்வின் போது விபத்துக்குள்ளானது.
எனினும், அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் விமானத்தை விட்டுவிட்டு பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக குருநாகல் பாதெனிய மினுவாங்கேட் வித்தியாலய வளாகத்தில் தரையிறக்கினர்.
இந்த விமானத்தில் பிரதம பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானி மற்றும் பயிற்சி பைலட் அதிகாரி ஆகியோர் பயணித்துள்ளதுடன், அந்த அதிகாரிகள் குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 07.27 மணியளவில் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட குறித்த விமானம் சரியாக 7.55 மணியளவில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.