கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் மற்ற இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்கள் படுகாயடைந்தனர்.
சம்பவம் குறித்து கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் போனில் இருந்து சந்தேக நபருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சந்தேக நபர் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அதன்படி, சந்தேக நபர் நேற்று (மார்ச் 23) கிராண்ட்பாஸ் பொலிஸாரால் இரண்டு மொபைல் போன்களுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிகமாக இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரேண்ட்பாஸ் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.