2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று (28) நடைபெறும் எட்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ரஜத் படிதரின் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இறுதியாக இரண்டு அணிகள் மோதியபோது, பெங்களூரு அணி ஒரு நெருக்கமான வெற்றியைப் பெற்று 2024 ஐ.பி.எல். பிளேஆஃ சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதேநேரம், இந்த தோல்வியுடன் சென்னை அணியானது பிளேஆஃ சுற்றுக்கான வாய்ப்பினை தவறவிட்டு தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு சென்னை, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் கவனிக்க வேண்டிய இரண்டு முன்னணி வீரர்களாக இருப்பார்கள்.
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மஞ்சள் படைக்கு எதிராக அதிக ஓட்டங்களை எடுத்த துடுப்பாட்ட வீரராக ஷிகர் தவானை முந்திச் செல்ல விராட் கோலிக்கு வெறும் 5 ஓட்டங்கள் மாத்திரமே தேவை என்ற நிலையுள்ளது.
இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸை RCB வீழ்த்தியது.
சொந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை CSK வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நாளை முடிக்கும்.
ஐபிஎல் போட்டிகளில் RCB மற்றும் CSK அணிகள் 33 முறை ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஒரு போட்டி எந்த முடிவும் இல்லாமல் முடிந்தது.