• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்!

அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என்றும் குறிப்பிட்டார்.

பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி ’இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த UNESCO உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிரந்தர உபாய மார்க்கங்களை கலந்துரையாடும் வகையில் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் 75 வருடங்களை அண்மிக்கும் தருணத்தில் யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே அவர்கள் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பிரதிபலனாக அனுராதபுரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறுகிறது.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல், மரபுரிமைகளை பாதுகாத்தல், கல்வி, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு கைகொடுக்கும்.

எதிர்கால சந்ததியினருக்கென கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பலப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவராக யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முன்னரை விடவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் காலப்பகுதியில் நாம் உள்ளோம்.

கலாசாரத்திற்கென முன்னர் இல்லாத மகத்தான வரவேற்பைப் பெறுதல், உலக அமைதி, அபிவிருத்திக்கான அறிவுத்திறன் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்தல், AI தொழில்நுட்பத்தை உயர் நெறிமுறைகளுடன் கையாளுதல், நிலைபேறான கல்வி, சமுத்திர உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் திறனை மேம்படுவதற்காக யுனெஸ்கோ எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் காலத்திற்கு ஏற்றவை.

கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள பேரழிவுகள் தொடர்பில் அந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுக்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

Related

Tags: Harini AmarasuriyaUNESCOயுனெஸ்கோஹரினி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2025; கொல்கத்தா – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

Next Post

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச
இலங்கை

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

2026-01-26
மீண்டும் pickmeக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்
இலங்கை

மீண்டும் pickmeக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்

2026-01-26
எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

2026-01-26
Next Post
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும்!

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு  விளக்கமறியல்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

இலங்கையின்  கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு!

இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.