ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கச் செய்யவும் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது.
எனினும், வடமேற்கு ஏமனை ஆளும் ஹவுத்தி தலைமையிலான அரசாங்கம், அந்த முனையம் ஒரு பொதுமக்களை கொண்ட பகுதி என்றும், அந்தத் தாக்குதல் “முழுமையான போர்க்குற்றம்” என்றும் கூறியது.
செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் காசா போருடன் தொடர்புடைய இஸ்ரேல் மீதான ஹவுத்தி தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் அமெரிக்கப் படைகள் தங்கள் குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
அன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது.