முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்க, மேல் நீதிமன்றின் மூவரடங்கி நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர், நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு 12 இன் விதிகளின்படி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சுமார் 7 மாதங்களுக்குப் பிறகுதான் அவர் பிணை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது