யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட மின்னல் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் உடுவில் பகுதியில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், கோப்பாய் பகுதியில் 1 குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், சாவகச்சேரி பகுதியில் 2 குடும்பங்களை சேர்ந்த 3 பேரும், மருதங்கேணி பகுதியில் 1 குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் என 19 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.