வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி ஒருவர், எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் 19 வயதான இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த யுவதியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் நேற்று இரவு (13) வீட்டை விட்டு வெளியில் சென்றிருந்த நிலையில், குறித்த யுவதி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினரும் , அப்பகுதி மக்களும் தீயை அணைக்க முற்பட்ட நிலையிலும் யுவதிஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.