வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று(21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில் பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது கைதுசெய்யப்பட்டார்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இன்றைய தினம் (22) வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.