மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று(22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
14 இலட்சம் அஸ்வெசும பயனாளர் குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது
அதன்படி பதினைந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை பதினேழாயிரத்து ஐநூறு ரூபவாகவும்,
எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது .
இதேவேளை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஐயாயிரம் ரூபாய் வழங்கும் குடும்பங்களுகு அந்தத் தொகை மாறாமல் வழங்குவதற்கும் குழு அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .