ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் கூறினார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், இலங்கைக்கு வருகை தரும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.