அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால், குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்ததுடன் இதில் பலர் சிக்கி கொண்டுள்ளதுடன் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளை, இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
மேலும், 27 பேர் காணாமல் போயுள்ளதுடன் அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார்.
இந்நிலையில், இதுவரை 850 பேர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.