முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (25) மஹர நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரசன்ன ரணவீரவை செப்டம்பர் 8 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, கடந்த 18ஆம் திகதி அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில் இன்றுவரை (25) அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















