மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (03ஆம் திகதி) நண்பகல் 12.09 அளவில் மாரவில, தம்பெலஸ்ஸ, மாவத்தகம, உக்குவெல மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
காற்று:
காற்று மேற்கு முதல் தென்மேற்கு வரை வீசும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும்.
சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (50-60) கி.மீ. வரையிலும் அதிகரிக்கலாம்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வழியாக வாகரை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (45-50) கி.மீ. வரையிலும் அதிகரிக்கலாம்.
கடல் நிலை:
சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வழியாக வாகரை வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.














