• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்- மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்!

மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்- மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/08
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

2018ம் ஆண்டு 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட, உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாக கை விடுங்கள், என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

நுவரெலியா, கொழும்பு அவிசாவலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்ட பெருந்தோட்ட பிராந்தியங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாச்சார, வளர்ச்சிகளில் குன்றிய பிரிவினர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இது 200 வருட சாபம், இதற்கு காரணம், இந்த சமூகம் இந்நாட்டின் தேசிய வரம்புக்குள் கொண்டு வர படாமல் இன ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டமை ஆகும்.

இதற்கு காரணம், இவர்கள் அந்நியர்கள், இவர்கள் தமிழர்கள், இவர்களுக்கு காணி வழங்க கூடாது, வீடு வழங்க கூடாது, தேசிய கல்வி கட்டமைப்புகள் கொண்டு வர கூடாது, தேசிய சுகாதார கட்டமைப்புகள் கொண்டு வர கூடாது, பிரஜா உரிமை வழங்க கூடாது, என எம்மீது காட்டப்பட்ட, காட்டப்படும் இனவாதம்தான்.

200 வருட ஒடுக்கு முறையில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் இந்த சமூகத்தின், கல்வி தரும் பாடசாலைகள், 1976ம் ஆண்டிலேயே தேசிய கல்வி கட்டமைப்புக்குள் கொண்டு வர பட்டன.

கடைசி தொகுதி குடியுரிமையும் 2003ம் ஆண்டிலேயே வழங்க பட்டு முழுமை அடைந்தது.

ஆகவே தேசிய வளர்ச்சி பாதையில் நாம் தாமதமாகவே நடக்க ஆரம்பித்தோம். இதனால், இந்த சமூகம், பின்தங்கிய சமூகமாக இன்றும் இருக்கிறது.

இந்த இன ஒதுக்கல், கொள்கையை இந்நாட்டில் அனைத்து பெரும்பான்மை கட்சிகளும் முன்னெடுத்தன.

இந்த சூழலில்,  இதை கணக்கில் எடுத்தே 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அன்றைய நல்லாட்சி அரசில், தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் பல்வேறு நல திட்டங்களை முன்னெடுத்தோம்.

அதுவரை மறுக்கப்பட்டு வந்த அல்லது உதாசீனம் செய்யப்பட்டு வந்த, காணி உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை ஆகியவற்றை பெற்றெடுக்கும் பெரும் பணியை நாம் ஆரம்பித்தோம்.

இவற்றை வெறும் ஒரு துறை சார்ந்த அமைச்சினால் மட்டும் செய்ய முடியாது. அமைச்சுகளுக்கு மேலாக, பல்வேறு துறை சார்ந்த அமைச்சுகளின் பணிகள் கூட்டி இணைக்க பட வேண்டும்.

இந்த பிரதான தேவை பின் புலத்தில், மலையக மக்களின் விசேட குறைதீர் (Affirmative Policy) கொள்கை தேவை அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனமே, மலையக அதிகார சபை ஆகும்.

நீங்கள் இன்று இதை, ஒரு அமைச்சின் அங்கமாக மாற்ற முயல்கிறீர்கள்.

அமைச்சு என்பதும் அதன் நடவடிக்கைகளும், நாட்டின் ஜனாதிபதியால் தீர்மானிக்க படுகின்றன. நாளை குறிப்பிட்ட அமைச்சு இல்லாமல் போகுமானால், அந்த அமைச்சின் அங்கமும் காணாமல் போய் விடும்.

ஆனால், அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு, பராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட திணைக்களங்கள், அதிகார சபைகள், என்பன அமைச்சுகள், அரசாங்கங்கள் மாறுகின்ற காரணத்தால், மாறி விடாது. காணாமல் போய் விடாது. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஆட்சியை பொறுப்பேற்று இம்மாதத்துடன் ஒரு வருடம் நிறைவு பெருகிறது. வாழ்த்துக்கள், மலையக மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி உள்ளீர்கள். ஆனால், இந்த ஒரு வருடத்தில் சொல்லிக்காட்ட, எடுத்துக்காட்ட, மலையக பிராந்தியத்துக்கு உங்கள் அரசாங்கம் காத்திரமாக எதுவும் செய்து விட வில்லை. ஆனாலும், நாம் பொறுமையாக காத்திருக்கிறோம்.

நீங்கள் எதுவும் செய்ய வில்லை. என்பதை விட, இன்று, இருப்பதையும் பிடுங்கி எடுக்க முயல்கிறீர்கள். அதையும் நாம் பொறுமையாக ஏற்று கொண்டு இருக்க முடியாது என்பதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

நீங்கள் செய்ய முயலும் இந்த காரியத்தின் பாரதூர தன்மையை தெரிந்து கொண்டா, அல்லது தெரியாமலா, நீங்கள் செய்கிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை.

எதுவாக இருந்தாலும், 2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது ஆட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட, உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாக கை விடுங்கள் என கோருகிறேன்.

என அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: #anurakumaradisanaykeMano Ganeshansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறலுக்கு இலங்கை உறுதி!

Next Post

சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைக்கான சாத்தியம்!

Related Posts

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2026-03-16
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!
இலங்கை

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

2026-03-16
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி
இலங்கை

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

2026-03-16
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!
இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
Next Post
சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைக்கான சாத்தியம்!

சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைக்கான சாத்தியம்!

மட்டுப்படுத்தப்பட்ட களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை!

மட்டுப்படுத்தப்பட்ட களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை!

வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!

வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

0
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-16
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

2026-03-16
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

2026-03-16
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2026-03-16

Recent News

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-16
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

2026-03-16
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.