இலங்கை அமைச்சரவை, 1988 ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
2025 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் படி, அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பின்வரும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:
-
மொத்தக் கூட்டுத் தொகை அடிப்படையிலான வரியை 15% இலிருந்து 18% ஆக உயர்த்தல்.
-
இலங்கைப் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு வரியை 50 அமெரிக்க டொலர்களிலிருந்து 100 அமெரிக்க டொலர்களாக உயர்த்தல்.
சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் ஜனாதிபரின் ஒப்புதலை பெற்றுள்ளது. அரசாங்கம் இதை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














