மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, இதனையடுத்து அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளை பந்து தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
அந்த அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளமையால் அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















