புது டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை, அல் பலாஹ் பல்கலைக்கு பின்புறம் உள்ள ஒரு இடத்தில் 12 நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி டில்லியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், நாளுக்கு நாள் திடுக்கிடும் புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அல் பலாஹ் பல்கலைக்கழக பேராசிரியர் முஷம்மில் அகமது கனாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன்போது அல் பலாஹ் பல்கலை வளாகத்தை அடுத்துள்ள மசூதிக்கு பின்புறம் உள்ள செட்டில் 2,600 கிலோ அமோனியம் நைட்ரேட்டை பதுக்கி வைத்துள்ளனர் எனவும் மசூதியில் பழக்கம் ஏற்பட்ட ஒருவரிடம் சிறு பொருட்களை தங்களுக்கு சொந்தமான ஷெட்டில் வைத்துக் கொள்ள அனுமதி பெற்று, அமோனியம் நைட்ரேட்டை அங்கு வைத்துள்ளான் எனவும் பின்னர் அப்பகுதியில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் குறித்து அறிந்தவுடன், டில்லி தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, பதேபுர் தாகாவில் உள்ள ஒரு மதகுருவின் வீட்டில் இந்த அமோனியம் நைட்ரேட்டை இடமாற்றம் செய்துள்ளனர் எனவும் புலனாய்வு தரப்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு சொந்தமான ஒரு வீட்டை, காஷ்மீரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் பழங்களை இருப்பு வைப்பதற்காக பயன்படுத்தப் போவதாக கூறி கடந்த ஜூலை மாதம் அல் பலாஹ் மாதம் 8,000 ருபாய் வாடகைக்கு அகமது கனாய் எடுத்துள்ளார்.
கனாய் இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளதுடன் அவருடன் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அல் பலாஹ் ஷஹீன் ஷஹீத்தும் உடன் வந்து சென்றுள்ளார்.
ஷஹீனை தனது சொந்தக்காரர் என்று கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜூம்மாவிடம் அறிமுகப்படுத்தி இருந்தாலும், புலனாய்வு அதிகாரிகளிடம், அவர் தனது மனைவி என்று ஒப்புக்கொண்டுள்ளான்.
இதேவேளை, டில்லி குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தேவையான மருந்துகள் நேரு மைதானம் அருகே அமைந்துள்ள ரசாயன கடையில் இருந்து வாங்கப்பட்டுள்ளதுடன் லால் பாபு என்பவர் உரிய உரிமம் பெற்று, மருத்துவமனை ஆய்வகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ரசாயனங்களை விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கடையில் இருந்து தான் ரசாயனங்களை வாங்கியதாக கனாய் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கடையின் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














