தொடர்ச்சியான செயல்பாட்டு நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இன்று (08) காலை நிலவரப்படி சுமார் 500 விமானங்களை இரத்து செய்தது.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான வழித்தடங்களில் டெல்லி (152) மற்றும் பெங்களூரு (121) ஆகியவை அடங்கும்.
இதனிடையே, பெரிய அளவிலான இடையூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, விமான நிறுவனத்திற்கு அதன் குளிர்கால அட்டவணை விமானங்களில் 5 சதவீதத்தைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பத்தில் விமான நிறுவனத்திற்கு 6 சதவீத உயர்வு வழங்கப்பட்டிருந்தாலும், இண்டிகோ அதன் செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்க தவறியமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் பெங்களூரு தவிர, சென்னை (81), ஹைதராபாத் (58), மும்பை (31), லக்னோ (26) மற்றும் அகமதாபாத் (16) ஆகிய இடங்களிலும் அதிகளவான விமான சேவைகள் இன்று காலை இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய இண்டிகோ செயல்பாட்டு இடையூறுகள் போன்ற ஒரு நெருக்கடி மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியாக, அனைத்து விமான நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடனும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இன்று ஒரு மீளாய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளது.













